அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான நெறிமுறைகளை பார்ப்போம் …
சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் செல்போன் பயன்படுத்தவும், ஸ்பீக்கர் போனில் பேசுவது, வீடியோ பார்ப்பது தவிர்க்க வேண்டும்.
பேருந்தில் பயணிகள் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்த வேண்டும்.

ஓட்டுநர்கள் பேருந்துகளில் சத்தமான பாடல்களை ஒலிக்க விடக்கூடாது.
அனைத்து பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட படும் எனவும்
அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜ் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார்.




