தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கஆட்சி பொறுப்பேற்று நாளையோடு 1 ஆண்டு நிறைவடைகிறது.அதனையொட்டிம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“எங்கள் திருநாட்டில், எங்கள் நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடும் என்றே நீ
என்ற கவிஞர் பாரதிதாசனின் எண்ணம், தமிழகத்தில் 07.05.2021 அன்று மீண்டும் ஈடேறியது. அந்த நாளில், நீதிக்கட்சியின் நீட்சியாய், தி.மு.கழக அரசின் தொடர்ச்சியாய், முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று அவர் தொடங்கிய உறுதிமொழியின் வீர முழக்கம், தமிழர் செவிகளில் இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஓராண்டு முடிவதற்கு உள்ளாகவே முனைந்து நின்று நிறைவேற்றிய, ஓய்வு அறியா உழைப்பாளியாம், நம் முதல்வரின் செயல் திறனை நாடும் ஏடும், நல்லவர்களும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் பாராட்டிப் புகழ்மாலை சூடி இருப்பது, திராவிட இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கின்றது.
தமிழ்நாட்டில் அரசு பணி இடங்களில் தமிழர்களுக்குத்தான் வாய்ப்பு, அவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறல் வேண்டும்; அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும், கோப்புகள், அரசு செயல்பாடுகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இடம்பெற வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகளால் தமிழுக்கும், தமிழர்க்கும் உரிய இடம் தந்து சிறப்பு செய்து வருகிறது கலைஞரின் வழி நிற்கும் தமிழ்நாடு அரசு.
‘ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்ல’ என்று அறிவித்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்ற புதிய பெயரினைச் சூட்டி, 317 கோடி ரூபாய் மதிப்பிலான சமூக நலத் திட்டங்களை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்கள் நலனை மேம்படுத்த 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவினையும் அமைத்தது ஸ்டாலினின் அரசு.
தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை மக்களுக்காக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர் காக்கும் மருந்துகள் இவைகளோடு தி.மு.கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்து இருக்கின்றது தமிழ்நாடு அரசு.
அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட இயக்க லட்சியங்களை நிறைவேற்றும் அரசாக, தமிழ்நாடு அரசு கடந்த ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. இந்தச் சாதனைச் சரிதம் தொடரவும், அனைத்துத் துறைகளிலும் திராவிட இயக்கக் கொள்கைகள் நிறைவேற்றிடவும் மின்னல் வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்ற ஸ்டாலின் அரசுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குறள் 232:உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ். பொருள் (மு.வ):போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் […]
- விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு ராஜன்செல்லப்பா குடும்பத்திற்கு தகுதியில்லை.., எஸ்.எஸ்.கதிரவன் குற்றச்சாட்டு!தற்போதைய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பாவின் அரசியல் […]
- அதிமுகவை பற்றி எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார்! செல்லூர் ராஜூ உருக்கம்..80 சதவீதம் தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- என்னுடைய எதிர்காலத்தை தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள்! ஓபிஎஸ் பரபரப்பான பேச்சு…பெரியகுளம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு மதுரை […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்புடாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் […]
- அமைச்சர் அர.சக்கரபாணியுடன் டாக்டர் அழகுராஜா சந்திப்புதமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு […]
- நூலிழையில் உயிர் தப்பி முதல்வர்ஹெலிகாப்டர் விபத்தில் உ..பி.முதல்வர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் […]
- 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியீடுநாளை காலை 10 மணியளவில் 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறதுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]
- டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசிய ஓபிஎஸ் -ஆர் .பி. உதயகுமார்ஓ.பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் […]
- ஆளுக்கொரு பாதையில் பயணிக்கும் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலாசசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் […]
- சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வுசர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா […]
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]