டாஸ்மாக் சரக்குவிலை உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபான பிரியர்கள் இதனால் கலக்கத்தில் உள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள்,ஒயின் மற்றும் பீர் போன்று அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்டமசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் விரைவில் மதுபானங்கள் விலை உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் வெளிநாட்டு மதுபானங்கள் ,பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என்று கூறப்படுகிறது.