• Sat. Apr 27th, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்

ByA.Tamilselvan

Dec 3, 2022

ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார்.
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. டெல்லியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சமீபத்தில் அவர் டெல்லி செல்வது உறுதி செய்யப்பட்டது. அதன்படி 5-ந் தேதி காலை டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *