தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காவிரி பிரச்சினை காரணமாக தீவிர போராட்டத்தின் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2018ல் மத்திய அரசு சட்டவிரோதமாக மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி கொடுத்ததை பயன்படுத்தி கர்நாடகா வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்து, உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் வழங்கியுள்ளது. அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிவைத்து ஒத்த கருத்தை உருவாக்குவதாக கூறி மத்திய அரசு தொடர்ந்து ஆணையத்தை நிர்பந்தித்து வருகிறது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கர்நாடக பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் தமிழகம் கர்நாடகம் இடையே ஒரே கருத்து உருவாகும் பட்சத்தில் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அரசு ஒரு பார்வையாளராக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் குறித்தான நான்கு மாநிலங்களின் நிர்வாக அதிகாரம் முழுமையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசினுடைய கருத்து ஆணையத்தை அச்சுறுத்தும் வகையிலும் தமிழகத்திற்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒருதலைப்பட்சமான சதி செயலாகும்.
மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும். ஆணையத்தில் சம்பந்தபட்ட மாநிலங்கள் மட்டும்தான் கருத்து பரிமாறிக் கொள்ள முடியும். மத்திய அரசு பார்வையாளராக மட்டுமே பங்கேற்க இயலும் இதனை உச்சநீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் தமிழகம் கர்நாடகம் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்கிற கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எதிர்காலத்தில் அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும். பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கு தமிழக அரசு உடனடியாக உரிய எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து மேகதாது அணைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. அதனை துரிதப்படுத்த சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது!
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]