அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு
தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு…
தோல்வியின் எதிரொலியே பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
இடைத்தேர்தல்களில் தோல்வியின் எதிரொலியே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த ஒன்றிய அரசு, தற்போது வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால்,…
பல மாநிலங்களுக்கான வாட் வரியை குறைத்தது ஒன்றிய அரசு
இந்தியாவில் தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு அமலுக்கு வந்ததால், விலை குறைந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. பெட்ரோல் மீதான கலால் வரியை…
தமிழகத்தில் இரவு நேரத்தில் அதிக பட்டாசுகள்: அதிகரித்த காற்றுமாசுபாடு
தீபாவளி பண்டிகையையொட்டி இரவு நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு குறித்து உலக சூழலியல் அமைப்போடு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்தி வரும் காற்று மாசுபாட்டின் அளவீடுகள் மூலமாக…
தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்தது தமிழக அரசு
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது சென்னையை அடுத்து தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5…
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்க்கு இனிப்பு வழங்கி தீபாவளியை சிறப்பித்த காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியான முறையில், பாதுகாப்பாக, நல்ல முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 1500 போலீசார் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு…
மயில்களை வேட்டியாடிய இருவர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசிவல்பட்டி வனப்பகுதியில் விற்பனைக்காக 17 மயில்களை வேட்டியாடிய சம்பவம் அப்பகுதியல் அனைவரையும் வேதனையடைய செய்துள்ளது. இது தொடர்பாக இருவரை கைது செய்து திருப்பத்தூர் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பத்தூர் அருகே உள்ள கீழசிவல்பட்டி வனப்பகுதியில்…
‘காற்று மாசை போக்க வெடியை மறந்து செடியை நடுங்கள்’ – விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறுவர்கள்
தீபாவளி திருநாளில் ‘காற்று மாசை போக்க வெடியை மறந்து செடியை நடுங்கள்’ சேலத்தில் நூதன முறையில் விழிப்புணர்வை சிறுவர்கள் ஏற்படுத்தினர். இதற்கு பொதுமக்களிடம் பாராட்டு குவிகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு. இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் ஒளி…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடக்கம், கொரானா தொற்று காரணமாக குறைந்த அளவு பக்தர்களுடன் நடைபெற்றது
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் இன்று கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…
நரிக்குறவர், இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்
மாமல்லபுரம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதி சான்றிதழ்கள் மற்றும் நல வாரிய அட்டைகளை முதல்வர் வழங்கினார். ரூ.4.53 கோடி மதிப்பில் 282 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார்.…




