அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது சென்னையை அடுத்து தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் மூலம் தமிழ்நாட்டில் 20வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி உதயமானது. கடந்த வாரத்தில் கும்பகோணம் உள்ளிட்ட மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.