ஆண்டிபட்டி அருகே வேன் மற்றும் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 3 பேர் பலியாயினர். படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம், செக்காணூரனியை சேர்ந்த 4 பேர் ஒரு காரில் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதே காரில் மீண்டும் செக்காணுரனி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டையை சேர்ந்த முருகபிரபு (44), என்பவர் ஓட்டினார். நேற்று மாலை சுமார் 5.10 மணியளவில் ஆண்டிபட்டி அடுத்து கணவாய் பகுதியில் திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஒரு கார் மீது மோதி, அதற்கு பின்னால் மதுரையில் இருந்து கேரளா நோக்கி சென்ற சுற்றுலா வேனுடன் நேருக்கு நேர் மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்தால் கார் மற்றும் வேனில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர். இந்த விபத்தில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கின. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த முருகபிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், அதே காரில் பயணித்த செக்காணூரனியை சேர்ந்த சிவபாண்டி(48), செல்வம்(55) ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அதே காரில் பயணம் செய்த மற்றொரு நபரான செக்காணூரனியை சேர்ந்த பாண்டியராஜன்(44) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிலர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக தேனி-மதுரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
- ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட […]
- மே.24ல் மேட்டூர் அணை திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்புகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக […]
- மாவீரனாக களம் கான இருக்கும் சிவகார்த்திகேயன்…தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் தமிழ் […]
- இதுதான் புதிய இந்தியா… நடிகர் மாதவன் புகழாரம்…பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் […]
- மகளை கொலை செய்த வழக்கில் இந்திராணிக்கு ஜாமீன்…மகளை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
- ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பதா- தி.மு.க.வுக்கு கண்டனம்ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது- தி.மு.க.வுக்கு மயூரா ஜெயக்குமார் கண்டனம்முன்னாள் பிரதமர் […]
- நாய்க்குட்டியை திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடுவீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை புல்லட்டில் வந்து திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு- காவல்துறை விசாரணை.மதுரை […]
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்காங்களா..???தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் […]
- லாக்அப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு பயிற்சி முகாம் -டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்காவல் நிலையத்தில் ஏற்படும் லாக் அப் மரணங்களை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் […]
- 1000 கோடி ஏலத்திற்கு விலைபோன உலக வரலாற்று கார்…உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஏலத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் முதன்முறையாக விற்பனையாகியுள்ளது. என்னதான் […]
- உக்கிரமான உக்ரைன்-ரஷ்யா போர்…உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல […]
- தால் இட்லி:தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி […]
- நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் […]
- தமிழகத்தில் புதிய வகை கொரோனா..தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் […]