தேர்தல் நேரங்களில் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் கூறியதாவது: தேர்தல் விதிகளை மீறி பொது மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
பொது மக்களின் பணம் மூலம், இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும், இது நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற அடித்தளத்தை அசைப்பதுடன், தேர்தல் செயல்முறையின் தூய்மையை கெடுப்பதுடன் சமநிலையை சீர்குலைக்கிறது. தேர்தலை கொண்டு இலவசங்களை அறிவிப்பது, ஜனநாயகம் புத்துயிர் பெறுவதற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதுடன், அரசியல்சாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் நேரத்தில் அரசின் கஜானாவில் இருந்து இலவசங்களை அறிவிப்பது முறையற்ற நடவடிக்கை. பொதுமக்களின் பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன் தேர்தல் சின்னங்களை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி என்வி ரமணா, ஏஎஸ் போபண்ணா, ஹிமோ கோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: குறைந்த நம்பிக்கையுடன், பல்வேறு விவகாரங்களில் விதிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்.
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு ஒரு முறை ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையம், பின்னர் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்கிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. இலவசங்களுக்கான பட்ஜெட், வழக்கமான பட்ஜெட்டை விட அதிகமாக செல்கிறது. எனவே இலவசங்கள் என்பது முக்கியமான விஷயம். அரசியல் கட்சிகள் இலவசங்களை விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]