• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கவிஞர் மேகலைமணியன்

  • Home
  • கவிதைகள்:

கவிதைகள்:

பேரழகா! தடுக்க எத்தணித்தாலும்மறுக்க முடியாத ஆனந்தத்தருணங்கள்… கொடுக்க நினைத்தாலும்…எட்டிடாத இடைவெளியாய்தொலைவுகள்; நிலவுக்கும் பூமிக்கும்இடையேயான உறவிது… ஆனாலும் ஒன்றையொன்றுஅழகாக்கிடத் தவறுவதில்லை! தூரமிங்கே தொலைவுகளுக்கே;தொலையாத நியாபகங்களுக்குஎன்றுமில்லை….என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதைகள்:

பேரழகா! உன்னைப் பற்றி எழுதும்போது மட்டும்வார்த்தைகளும் வானவில்ஆகிறதே ஞாபகங்களும் மகிழ்ச்சிகடலில் தத்தளிக்கிறதே கண்முன்னே சொர்க்கமும்கை சேர்ந்தே களிக்கிறதேஎன் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதைகள்:

பேரழகனே! வெள்ளைத்தாளென காத்திருக்கிறேன்எழுதிவிடு எனக்குள்..‌உன் நேசக்கவிதை ஒன்றினை உனதானநேசப் பெருவனத்தில்அடைமழை என அமுத மழை பொழிந்து பெருங்காதலெனஈரத்தடம் பதித்துகுளிர் தொலைத்து… மீள மீள வாழ்ந்து விடமுகிழ்த்திருக்கும் என்ஆயுளின் நேசத்தை….நீயென்பதை விட வேறென்ன சொல்ல என் பேரழகனே கவிஞர் மேகலை மணியன்

கவிதைகள்:

பேரழகனே! விட்டுச்செல்லவும் மனது வரவில்லைகையோடே கூட்டிச்சென்றுவிடவும் தோதாக இல்லை போகிறது போ! உன்னுடனான என் எண்ணங்களின் நினைவுகளைஉன்னுடன் பேசி வாழ்ந்த கணங்களுக்குள்பொதிந்து வைத்துக்கொள்கிறேன். திரண்டு விழாதுகண்களிலேயே தங்கியவிடைகொடலின் கண்ணீர், ஏன் இத்தனை இனிக்கிறது!!ஏன் இத்தனை கனக்கிறது!!ஏன் இத்தனை கரிக்கிறதுஎன் பேரழகனே கவிஞர்…

கவிதைகள்:

பேரழகனே! வானம் என்ன இவ்வளவு அழகாக இருக்கிறது இன்று விண்மீன்கள் கண்சிமிட்டிகண்சிமிட்டி சிரிக்கிறதே இவளை பார்த்து என்ன காரணமாக இருக்கும் ஓ புரிகிறது மேகத்துக்குள் புதைந்த நிலவுமெதுவாக வெளி வந்து உலா வரப்போய்கிறதோ ம்ம் வரட்டுமே என்ன என்ன தான் நிலவே…

கவிதைகள்:

பேரழகா! நீ , நான்நிறைந்திருக்கும்பாடல்களோடுசிலிர்த்து துயிலும்ஓர் இராப்பொழுதுநிகழ்ந்திடாதோ…!என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதைகள்:

பேரழகா!! மௌனத்தில் வேதனைகளை வைத்துவார்த்தைகளை மறைப்பவனே….உன் எண்ணத்தில் நானிருந்தால்ஒரு வார்த்தையாவது பேசி விடேன்என் ஆயுள் நீடிக்கட்டும் என் பேரழகா! கவிஞர் மேகலைமணியன்

கவிதைகள்:

பேரழகன்!! அவளும் அவனும் நீண்ட நேர விழி சந்திப்பில் மூழ்கி திளைத்திடும் நேரம்… கைகள் இரண்டும் கோர்த்துக்கொண்டு. விழி நோக்கும் இடைவெளியில் விரல்கள் பின்னிக்கொள்ள…. இதழ்கள் பின்ன துடித்தது…. மன்னவனின் மாய விழிகள் கண்டு சொக்கி நின்ற மான்விழியாளோ அவனை அள்ளி…

கவிதைகள்:

பேரழகனே! உன் புன்னகையில் மின்னி மயங்குகிறது நட்சத்திரகூட்டம் உன் வசீகரிக்கும் கண்களின் ஒளி நிலவுக்கு ஒப்பானதோ அதனால் ஏற்படுகிறதோ எனக்குள் ஓர் புது வகை மோக மூட்டம்! உன் கம்பீர அழகு கண்டு வர்ணிக்கும் ஆசையில் ஓரன்பு மழை பொழிவதற்கான முன்னேற்பாடாக…

கவிதைகள்

ஓர் மகிழ்வு ஆரவாரத்தின் வழிகாட்டி நீ தானே நீயிலாத போது பௌர்ணமி இரவு கூட அமாவாசையாய் நகர்கிறது எனக்கு குளிருட்டும் காற்று கூட எரிச்சலூட்டும் வெப்பத்தை உமிழ்வது போல் ஓர் தோன்றல் மனத்தினில் ஆம் நீ தானே என் ஹார்மோன்களில் மகிழ்கீதம்…