• Tue. Feb 18th, 2025

ஓர் மகிழ்வு ஆரவாரத்தின் வழிகாட்டி நீ தானே

நீயிலாத போது பௌர்ணமி இரவு கூட அமாவாசையாய் நகர்கிறது எனக்கு

குளிருட்டும் காற்று கூட எரிச்சலூட்டும் வெப்பத்தை உமிழ்வது போல் ஓர் தோன்றல் மனத்தினில்

ஆம் நீ தானே என் ஹார்மோன்களில் மகிழ்கீதம் மீட்டும் ஹார்மோனிய ஸ்வரங்கள்

மெஸ்மரிசம் செய்யவைக்கும் உன் மென்ஸ்பரிசமே எனக்கு பரவசத்தை தூண்டும்
பொழுதாய் அமையும்

இல்லையேல் பழுதாய் அமையும் என் அனுதினமும்
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்