மல்லாங்கிணரில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.30 கோடி மதிப்பில் புதிய வீடுகள்- அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
மல்லாங்கினரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 40 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
அறிவுசார் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகரின் புதிய அடையாளமாகவும், அறிவுசார் சுற்றுலா மையமாகவும், நவீன அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமையவுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்காவிற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.