• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கடலூரில் 27-ந் தேதி அண்ணாமலை ஆர்ப்பாட்டம்

ByA.Tamilselvan

Oct 22, 2022

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தி.மு.க நடத்தும் அரசியலை கண்டித்து வருகிற 27-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் என பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோவையில் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இது தொடர்பாக அண்ணாலை 60 மாவட்ட தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேரை திரட்டி போராட்டத்தை நடத்த வேண்டும். தி.மு.க.வின் இரட்டை வேட அரசியல், மின் கட்டண உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.