தென்காசி யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் தென்காசி யூனியன் துணைச் சேர்மன் கனகராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் திவான் ஒலி, முன்னாள் யூனியன் சேர்மன் தமிழ்செல்வி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோமதி நாயகம், தேன்பொத்தை யூனியன் கவுன்சிலர் கலாநிதி, கொட்டாகுளம் கிளைச் செயலாளர் ராமர் பெரிய பிள்ளை, வலசை திமுக கிளைச் செயலாளர் முருகேசன் , கணேசன் குட்டி, உஸ்மான் மற்றும் பலர் பங்கேற்றனர்.