இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்.
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் மிகவும் செழுமையான இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழ்நாடு திகழ்கிறது. தமிழர்கள் தங்களின் வேரூன்றிய தமிழ் கலாச்சாரத்தில் பெருமிதம் கொள்கிறார்கள்.
சுமார் 2000 ஆண்டுகால வரலாற்று பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் பிறந்த மக்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும், அவர்களின் கலாச்சாரம் அவர்களின் அடையாளம் மற்றும் மரபுகளை வலுவாக பின்பற்றுவது அவர்களின் வரலாற்றை மேலும் வலுப்படுத்துகிறது.

தமிழர்களின் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடம் வகிப்பது தமிழகத்தில் உள்ள கோவில்கள் சேர சோழ பாண்டிய மன்னர் காலங்களில் ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டி எழுப்பப்பட்ட வழிபாடு மட்டுமல்லாது வரலாற்றின் பக்கங்களை திரும்பிப் பார்க்கும் ஒரு அற்புத புத்தகமாகவும் கோயில்கள் திகழ்கின்றன. மன்னர்களின் ஆட்சி நிர்வாகம் வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கு கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மிக முக்கிய சாட்சியமாக விளங்குகின்றன.
அந்த அளவுக்கு தமிழர்களை பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தவை கோவில்கள். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன இவற்றில் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன. மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது என பழைய தகவல்கள் கூறியுள்ளன. ஆனால் தற்போது வந்துள்ள தகவல்களின் படி சுமார் 79 ஆயிரம் கோவில்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தற்போது உள்ள கோயில்களின் எண்ணிக்கை மற்றும் பாரம்பரியம் ஆகிய தகவல்களை சேகரிப்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு மும்பை ஐஐடி மாணவர்கள் கள ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர்.. அந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டும் 79,154 கோவில்கள் உள்ளதாகவும், தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்கள் என்ற எண்ணிக்கை உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் உள்ள மாநிலம் குஜராத். இங்கு 49,995 கோயில்கள் உள்ளன. இதில் சோம்நாத் ஆலயம், சாம்லஜி விஷ்ணு கோயில், நிஷ்கலங்க் மஹாதேவ் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் பிரசித்தி பெற்றது. நான்காவது இடத்தில் மேற்குவங்காளம் உள்ளது. இங்கு 53,658 கோயில்கள் உள்ளன. இதில் காலிகாட் ஆலயம், பிர்லா கோயில் உள்ளிட்ட பல ஆலயங்கள் பிரசித்தி பெற்றவையாகத் திகழ்;கின்றன. மூன்றாவது இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. இங்கு 62,232 கோயில்கள் உள்ளன. இதில் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம், வித்யசங்கரா கோயில், முர்டேஸ்வரர் சிவன் கோயில் என பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு 77,283 கோயில்கள் உள்ளன. இதில் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில், திரயம்பஹேஸ்வரர் கோயில் என பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. நம்முடைய தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 79,154 கோயில்கள் உள்ளன. இதில் மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் என பல கோயில்கள் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரும் பேறு அல்லவா!
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]