நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மஞ்சூர் குந்தா தாலுகா சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 60 லட்சம் கட்டிட தொழிலாளர்கள் கட்டிடத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களின் பணி பாதுகாப்புக்காகவும் சமூக பாதுகாப்புக்காகவும் தனி சட்டம் இயற்றப்பட்டுள்ளதோடு தனி நல வாரியமும் தனி நலநிதியும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.விபத்து மரணம், இயற்கை மரணம், குடும்ப நிதி, குழந்தைகள் கல்வி, திருமணம் உள்ளிட்டவைகளுக்கு தமிழ்நாட்டில் உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது.இது போதுமானதாக இல்லைஎனவே விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இஎஸ்ஐ, பிராவிடண்ட் பண்ட் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். விபத்து சிகிச்சை, சிகிச்சைக்கான நிவாரணம் உள்ளிட்ட பலன்களை வாரியமூலம் வழங்க வழி செய்யப்பட வேண்டும்.60 வயது நிறைவடைந்த தொழிலாளிக்கு மாதம் ரூபாய் 1000/- ஓய்வு ஊதியம் என்பதை உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஈம சடங்கு உதவி, இயற்கை மரண உதவி தொகையும் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். அனைத்து வேலைகளிலும் 90% பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு பேருக்கால பலன் ஆறு மாத கால சம்பளமாக ரூபாய் 90,000/- வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க வேண்டும்.வீடு இல்லாத கட்டிட தொழிலாளிக்கு 4 லட்சம் ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தில் நிதி உதவி கிடைக்க ஆவன செய்யப்பட வேண்டும். ஆண்டுக்கு ரூபாய் 720/- கோடி நலநிதி வசூலிக்கப்படும் நிலையில் தொழிலாளியின் நலனுக்கு நல உதவியை உயர்த்தி வழங்க வேண்டும்.மேற்காணும்பிரச்சனைகளுக்கு தாங்கள் தலையிட்டு தீர்வு காண உதவிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். பிக்கட்டி கட்டட சங்க கிளை நிர்வாகிகள் தோழர்கள் ரவிந்திரநாத், S.ரவி ,K.மணி, பரந்தாமன் உள்ளிட்ட கட்டட சங்க தொழிலாளர்கள் பிக்கட்டி VAO யிடம் மனு அளித்தனர். கட்டிட சங்க மாவட்ட செயலாளர் K.M.ஆரி, மாவட்ட கட்டிட சங்க தலைவர் L. சிவகுமார், கிளை சங்க நிர்வாகிகள் ரமணி, ஜோதி, ஜெயலட்சுமி உள்ளிட்ட பல பெண் தொழிலாளர்களும்,ஊராட்சி சங்க செயலாளர் R. ரகுநாதன் அவர்களும் கீழ்குந்தா – 1, கீழ்குந்தா – 2 கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இத்துடன் கட்டிட சங்க மேல்குந்தா கிளையின் நிர்வாகிகள் லட்சுமி,பாஞ்சாலி, யசோதா, எலிசபெத் மேரி, பரமேஸ்வரி, நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மேல்குந்தா VAO அவர்களிடம் மனு அளித்தனர்.
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]
- தந்தை மறைவு அஜீத்குமார் வேண்டுகோள்தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக […]
- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]