• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆதானியின் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்து மக்கள் பணம் கேள்விக்குறியாகி இருப்பதை கண்டித்து காங்கிரஸ்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதானி குழுமத்தின் LIC SBI ன் கோடிக்கணக்கான ரூபாய்களை பங்குகளாக முதலீடு செய்து இன்று பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்து மக்கள் பணம் கேள்விக்குறியாகி இருப்பதை கண்டித்தும், உலக பணக்கார்ர்கள் பட்டியலில் அதானி இரண்டாம் இடத்திற்க்கு உயர்ந்ததை JPC விசாரணை வேண்டும் என வலியுறுத்தி குந்தா வாட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டாரத்தலைவர் கீழ்குந்தா ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளரும் நீலகிரி மாவட்ட பாரத்ஜோடோ
ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்தலைவர் நேரு முன்னிலை வகித்தார் வட்டார்பொதுச்செயலாளர் ஒணிக்கண்டிகுமார் வரவேற்ப்பரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் கிண்ணக்கொரை மூர்த்தி, மாவட்ட செயலாளர் ஆர்மி ராஜ்குமார், மாவட்ட இளைஞர்காங்கிரஸ் பொதுச்செயலாளர் உசேன் வட்டாரதுணைத் தலைவர் மட்டக்கண்டிபோஜன்,, SC ST பிரிவு தலைவர் வெங்கட்சாமி, பொதுச்செயலாளர் காந்தி,கிண்ணக்கொரை ரங்கராஜ் அட்டுமன்னு சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், வீராசாமி,தீபு, கீழ்குந்தா கண்ணன்,சுரேஷ், ஸ்ரீதர்,மனோஜ்,அசோக், முருகேஷ் ,பரத், சந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.