தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பாக பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை சிம்மக்கல் அருகே முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செல்லூர் ராஜூ மேடையில் பேசுகையில்…, ” நீர் பூத்த நெருப்பை போல அ.தி.மு.க., இயக்கம் துவங்கப்பட்டது. அப்படியான நெருக்கடியில் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., இயக்கத்தை துவக்கினார். இயக்கத்தை அழித்துவிடலாம் என கலைஞர் கருணாநிதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது பகல் கனவாக தான் முடிந்தது. அந்த அளவிற்கு அரஜகத்தையும், ரவுடித்தனத்தையும் விரோத சக்திகள் செயல்பட்டனர். ஆனால் எதிராக உயிர்பெற்று மக்கள் இயக்காம இருந்துவருகிறது. அண்ணா வழியில் புரட்சித் தலைவர் கழகத்தை வழிநடத்தி கொண்டு வந்துள்ளார். பிற மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மூக்கில் விரல் வைக்கும் வகையில் அ.தி.மு.க., செயல்பட்டு வருகிறது. அப்படி வரலாறு பேசும் கட்சி தான் அ.தி.மு.க.,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு மக்கள் திட்டங்களை கொண்டு வந்தனர். அந்த வழியில் 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டை ஈ.பி.எஸ்., கொண்டுவந்தார். அதே போல் ஜல்லிக்கட்டு தடையை நீக்கி ஓ.பி.எஸ்., தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தி ஜல்லிக்கட்டு நாயகனாக திகழ்கிறார். ஆனால் தி.மு.க., ஆட்சியில் வெளுத்து வாங்கும் இந்த வெயிலை போல் மக்களை வாட்டி வதைக்கிறது. அ.தி.மு.க அரசு நெருக்கடியை சந்திப்பது புதிதல்ல எதையும் சந்திப்போம். அடக்கு முறைகளை செய்து வெற்றி பெறலாம் என நினைக்க வேண்டாம். பகல் கனவு பழிக்காததற்கு உங்க அப்பா கருணாநிதி தான் சாட்சி. தி.மு.க.,வை 10 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதை மறக்க வேண்டாம். 2016-ல் யாருடைய உதவியும் இல்லாமல் வெற்றி பெற்றது அ.தி.மு.க அதையும் மறக்க வேண்டாம்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என கணக்கு போட்டீர்கள், ஜோதிடம் சொன்னீர்கள். ஆனால் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். கொரோனா காலகட்டத்தில் மக்களை காப்பாற்றிய ஆட்சி தான் அ.தி.மு.க ஆட்சி. அந்த சமயத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்தோம். ஆட்சிக்கு வெளியில் இருந்து வாய் பேசிய ஸ்டாலின் ஆட்சிக்கட்டில் அமர்ந்த உடன் எதையும் செய்யவில்லை. அ.தி.மு.க அடிக்க அடிக்க எழும். நாங்கள் பனங்காட்டு நரி எதற்கும் அஞ்சமாட்டோம். அ.தி.மு.க., தி.மு.க.,வில் இணையும் என ஆறுடம் சொல்கிறார் தற்போதைய அமைச்சர் ஒருவர். அது ஒரு போதும் நடக்காது, இது ஜனநாயக இயக்கம். அழகிரி அ.தி.மு.க., அழிந்துவிடும் என தெரிவித்தார். ஆனால் அதற்கு பின் இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது அ.தி.மு.க., அதைப்போல் தான் தி.மு.க நினைப்பது பொய்யாகும். தேர்ந்தல் முடிந்ததும் சோர்ந்துவிடோம் என நினைத்திருப்பார்கள். ஆனால் அ.தி.மு.க அப்படி இல்லை ஒரு போதும் சோர்ந்து போகாது, வீரி எழும். தி.மு.க., மக்களிடம் சொன்ன வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்” எனவும் எச்சரித்தார்.

- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]