மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்துள்ளார்..
அத்துடன் அவர் யாருக்காக புகார் மனு அளித்துள்ளார் என்கிற செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் சொல்லி, 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 4 வார காலமாக தலைமறைவாக இருந்த அவரை கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர்.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார்.. அந்த புகாரில் உள்ளதாவது: கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக தொண்டர்களிடையே பேசிய ராஜேந்திர பாலாஜி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசினார். மேலும், “இது எஸ்பி வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது… தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும்” என்று ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். தொண்டாமுத்தூர் வரும்போது ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்க தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சு அன்று அமைந்திருந்தது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இந்து, முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சொற்களையும் ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தினார் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்… பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி, “திமுக தலைவர் முக ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசியுள்ளார்.. கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை… இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்போது புகார் தந்துள்ளேன்” என்றார். புகழேந்தி போலீசில் தந்துள்ள புகார் மனுவும், அதை தொடர்ந்து அவர் அளித்துள்ள பேட்டியும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டவர் மூத்த தலைவர் புகழேந்தி.. சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே இத்தனை காலமும் கருதப்படுபவர்.. இவரை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, எப்படியும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு புறம், புகழேந்தி ஒருவேளை திமுக பக்கம் தாவுவாரோ என்றும் கணிக்கப்பட்டது.. இவை இரண்டுமே நடக்கவில்லை.. இத்தனை நாட்களும் அமைதி காத்து வந்த நிலையில், இப்போது திடீரென புகழேந்தி ஸ்டாலினுக்காக பரிந்து பேசியுள்ளதும், அது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளதும் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. அப்படியானால் திமுக பக்கம் இவர் சாய்வாரா என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு வருகிறது..!
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]