அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக, இதற்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மீது மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் அதன் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம் என ஓபிஎஸ் தரப்பும் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 378 பக்கங்கள் கொண்ட மனுவை எடப்பாடி தரப்பு தாக்கல் செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதில், “அதிமுகவின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் ஓபிஎஸ் முடக்கப் பார்க்கிறார். ஓபிஎஸ் செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது.” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தனது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.

அதனையேற்று, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது, “பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வு பொதுக்குழு தொடர்பாக முடிவெடுக்கும். ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் வரவிருந்த நிலையில், அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]
- மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் […]
- இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய […]
- கே. பாக்யராஜ் வெளியிட்ட
‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!இயக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இயக்குநராக அறிமுகம் […] - பொது அறிவு வினா விடைகள்
- குறள் 406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.பொருள் (மு.வ):கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் […]
- இன்று உலக வன நாள் – புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள்புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்து வருகின்றன. இதன் […]
- கவிஞர் புலமைப்பித்தன் பேரன் நடிக்கும் எவன்தமிழ் சினிமாவில் திரைக்கலைஞர்களின் வாரிசுகள் நடிப்பதுஇயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசையில் மக்கள் மனதில் மறையாத […]