• Mon. Apr 21st, 2025

தேர்வு விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் தேனி மாவட்ட எல்லையில் ஒரு ஜாலி டூர்….

சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடம் இடுக்கி மாவட்டம். பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல், வனாந்தரங்கள், மிரட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் சுற்றுலாப் பயணியருக்கு கிடைக்கும் சிறந்த அனுபவத்தின் பகுதிகளாகும். பள்ளி இறுதித்தேர்வு விடுமுறையில் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு டூர் செல்ல தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள “கடவுளின் சொந்த நாடு” என்னும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, பார்க்கவேண்டிய சில குளு…குளு இடங்கள்……

தேக்கடி:
தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலம் தேக்கடி. முல்லைப்பெரியாறு அணையில் தேங்கி நிற்கும் நீர்தேக்கப் பரப்பின் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளை கண்டு ரசித்தவாறு படகுச்சவாரி செய்வது தேக்கடியின் சிறப்பு. மேலும் தேக்கடி வனப்பகுதியில் யானைச்சவாரி, டைகர்வியூ என சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சி அடையச்செய்யும் பல சிறப்பு அம்சங்களும் உண்டு. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கேரள வனத்துறையினரின் படகுகள் தேக்கடி நீர்தேக்கப்பரப்பில் சுற்றுலாப்பயணிகளுக்காக சவாரி சென்று வருகிறது. இயற்கை எழிலை ரசித்துச்செல்லும் சுற்றுலாப்பயணிகள் குமுளியிலிருந்து தேக்கடி படகுத்துறைக்கு நடந்து செல்கின்றனர். அனைத்து தரப்பு சுற்றுலாப்பயணிகளும் விரும்பி தங்கும் வகையில் தேக்கடி, குமுளியில் பல்வேறு கட்டணங்களில் நட்சத்திர ஓட்டல் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை உண்டு.
மூணாறு:
தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு கடல் மட்டத்திலிருந்து 1600 முதல் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூணாறு ஆனது. மூணாறுக்கு அருகில் உள்ள, நீலகிரி வரையாடுகள் உள்ள இரவிகுளம் தேசியப்பூங்கா, இந்த பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ள, தென்னிந்தியாவிலேயே உயரமான 2700 மீட்டர் உயரம் கொண்ட ஆனைமுடி சிகரம், மாட்டுப்பெட்டி கல்கட்டு அணை, ஏரி படகுச்சவாரி, கேரளாவின் முதல் நீர்மின் திட்டமான பள்ளிவாசல், அருகே உள்ள சின்னக்கனால் அதன் நீர்வீழ்ச்சியும் பார்த்து ரசிக்க வேண்டியவைகள். அனைத்து ரக கட்டணங்களிலும் தங்கும் விடுதிகள் உண்டு.

ராமக்கல்மேடு:
தேனி மேற்கு பகுதி தமிழக எல்லையான கம்பம் மெட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ராமக்கல் மெட்டு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரம் அடி உயரத்திலுள்ள இப்பகுதி ஆசியாவில் அதிக காற்றுவீசும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் கத்தரி வெயிலிலும் வேர்க்காது. இங்கு இடுக்கி அணை உருவாக காரணமாக இருந்த குலும்பன் என்ற ஆதிவாசி குறவன், மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் 40 அடி உயர பிரமாண்டமான சிலை மற்றும் கழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை கவரும். மலை உச்சிப்பகுதியிலுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகளையும், பைனாகுலர் மூலம் தமிழகத்தின் இயற்கை எழிலையும், கண்டு ரசிப்பதும் கண்களுக்கு விருந்தாகும்.

இடுக்கி அணை:
கம்பம்மெட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இடுக்கி. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையான இடுக்கி ஆர்ச்டேம் இங்குள்ளது. 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்திமலையையும் இணைத்து 555 உயரத்திற்கு கட்டப்பட்ட அணை இது. புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர். 555 அடி உயர அணையில் ஸ்பீடு போட்டில் சவாரி செய்வது சுற்றுலாப்பயணிகளுக்கு திரில்லான அனுபவம். இதை அடுத்து செறுதோணி அணை, பார்க், மற்றும் மூலமட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையம் பார்க்க கூடியவை.
வாகமண்:
குமுளியிலிருந்து ஏலப்பாறை வழியாக 45 கிலோ மீட்டரில் உள்ளது வாகமண். கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண்ணில் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்றுகள், பைன்மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், ஏரியில் கால்மிதி படகு சவாரி போன்றவை சுற்றுலாப்பயணிகள் கண்டு, அனுபவித்து ரசிக்க வேண்டியவை. இங்குள்ள பைன் மரக்காடுகளில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வாகமண் திரைப்பட நகரமாக மாறி வருகிறது. கூட்ட நெரிசல் இல்லாத அற்புத மலைப்பிரதேசம். சுற்றுலாப்பயணிகளும் தங்கும் வகையில் பல்வேறு கட்டணங்களில் லாட்ஜ்கள் உண்டு.

கெவி:
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்குள் அமைந்திருக்கு சுற்றுலாப்பகுதி கெவி. கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று திரும்ப கேரள வனத்துறையின் “ஜங்கிள் சபாரி” என்ற பஸ் இயக்குகின்றனர். வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து 16 கிலோமீட்டர் வரை செல்லும் 3 மணிநேர பயணத்துக்கு நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் கட்டணமாகவும், 50 ரூபாய் நுழைவுக்கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வண்டியில் இருந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். கெவி சென்று திரும்பும் வரை, இடையில் பயணிகள் வண்டியிலிருந்து இறங்க அனுமதிப்பதில்லை.

பருந்தும் பாறை:
குமுளியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் உள்ளது பருந்தும்பாறை. இங்குள்ள இயற்கை அழகும், தற்கொலை பாறை விளிம்புகளும், தாகூர் பாறையும் ( மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் தலையைப்போன்ற அமைப்பு உள்ளதால் தாகூர்பாறை என பெயர் பெற்றது). குறிஞ்சி மலர்களும் ரசிக்கக் கூடியவை. சபரிமலை மண்டல காலத்தில் மகரஜோதியை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் இங்கே வருகின்றனர்.

செல்லார் கோவில் மெட்டு:
குமுளியை அடுத்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செல்லார் கோவில்மேடு. இங்குள்ள அருவிக்குழி மலைப்பகுதியில் நீர்வீழ்ச்சி உள்ளதால் இதை கேரளாவில் அருவிக்குழி நீர்வீழ்ச்சி என அழைக்கின்றனர். இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி தான் தேனி மாவட்டம் கூடலூர் மந்தை வாய்க்கால் பகுதியில் வரும் சுரங்கனாறு நீர்வீழச்சி. மிக உயர்ந்த மலைப்பகுதி. இங்கிருந்து தமிழகத்தின் இயற்கை எழிலைக்காணலாம். தற்போது செல்லார்கோவில் வரும் சுற்றுலாப்பயணிகளுகளுக்காக அருவி உருவாகும் இடத்தில் செக்டேம் கட்டி கால்மிதி படகு (பெடல்போட்) அமைக்க இடுக்கி மாவட்டம் சக்குபள்ளம் கிராமப்பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

அஞ்சுருளி:
கம்பம் மெட்டில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் (கட்டப்பனையிலிருந்து ஏலப்பாறை செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில்) உள்ளது அஞ்சுருளி. இடுக்கி அணையின் ஆரம்பம் இதுவே. இரட்டையார் அணையிலிருந்து அஞ்சுருளிக்கு தண்ணீர் வரும் டணல் (குகை) இங்கு சிறப்பு மிக்கது. இரட்டையார் முதல் அஞ்சுருளி வரை 5.5 கிலோமீட்டர் நீளமும், 20 அடி அகலமும் உள்ள இந்த டணல் 1974&ல் தொடங்கி 1980&ல் முடிக்கப்பட்டது. ஐந்து உருளி (அண்டா) கவிழ்த்தி வைத்ததுபோல் மலைகள் இருந்ததால் ஆதிவாசி குடிகள் இதற்கு அஞ்சுருளி எனப்பெயரிட்டுள்ளனர். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம்.

அய்யப்பன்கோவில் மற்றும் தொங்குபாலம்.
கட்டப்பனையிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பெரியாற்றின் குறுக்கே அய்யப்பன்கோவில் பஞ்சாயத்து மற்றும் காஞ்சியாறு ஊராட்சியை இணைக்கும் இரும்பு தொங்கு பாலம். 2012ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. திரைப்படங்களில் முலம் பிரபலமானது. இந்த தொங்கு பாலம். தற்போது தனிப்பாடல்கள் மற்றும் திருமண ஆல்பங்களுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தொங்கு பாலத்தின் இடதுபுறம் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பழமையான ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் மற்றொரு சிறப்பு பகுதியாகும். கனமழையின் போது இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கோயிலும் அதன் சுற்றுப்புறமும் நீரில் மூழ்கும். இந்த சமயங்களில் பக்தர்கள் தெப்பம் மற்றும் படகுகளில் கோவிலுக்குச் சென்று வழிபடுவர்.

அம்மச்சி கொட்டாரம்.
குமுளியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திரல் குட்டிக்கானம் அருகே உள்ளது அம்மச்சி கொட்டாரம். குட்டிக்கானம் பனி படர்ந்த மலைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு 200 ஆண்டுகள் பழமையான அம்மாச்சிக்கொட்டாரம் (முன்பெல்லாம் ஆட்சியாளர்களின் மனைவிமார்கள் அம்மச்சி (அம்மா) என்று அழைப்பார்கள்) என்னும் அரண்மனை 25 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியில் மரங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. ராணி சேதுலக்ஷ்மி பாய், திருவிதாங்கூரின் கோடைகால தலைநகராக இந்த அம்மச்சிக்கொட்டாரத்தைப் பயன்படுத்தினார். இந்த அரண்மனையிலிருந்து இரண்டு ரகசிய நடைபாதைகளும், ஒரு சுரங்கப்பாதையும் உள்ளன. 5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து பீருமேடு ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு செல்கிறது என்கிறார்கள். பழமையான அரண்மனையை நேரில் பார்க்கும் போது சுற்றுலாப்பயணிகளுக்கு திகில் நிறைந்த பேய்மாளிகை படங்களை நினைவூட்டும். இவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் குளு,குளு இடங்கள் நம் அருகில் இருக்க இந்த பொதுத்தேர்வு விடுமுறையில் குடும்பத்துடன் ஒரு ஜாலி டிரிப் சென்று வரலாமே.

செய்தி தொகுப்பு: விஜி ஜோசப் (தலைமை செய்தியாளர்)

  • நெல்லையே எமக்கு எல்லை,குமரி எமக்கு என்றுமே தொல்லை..,
    குமரி மாவட்டத்தின் அரசியல். தமிழகத்தின் ஏனைய மாவட்ட அரசியலை விட சற்று வித்தியாசமாக பயணிக்கும் மாவட்டம். தமிழகத்தில் தேர்ந்த அரசியல் வாதியான கலைஞர் கருணநிதியே, குமரியின் அரசியல் கால நிலையை பார்த்து, பெற்ற அனுபவத்தில் தெரிவித்த கருத்து. நெல்லையே எமக்கு எல்லை,குமரி எமக்கு என்றுமே தொல்லை…. என்ற அவரது கருத்து, காலம் பல கடந்த போதும் ஒரு பேசு பொருளாக இன்றுவரை வலிமை பெற்று திகழ்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.!! நாகர்கோவிலில் மக்களவை உறுப்பினராக இருந்த… Read more: நெல்லையே எமக்கு எல்லை,குமரி எமக்கு என்றுமே தொல்லை..,
  • அதிமுகவை மத்திய ஏகாதி பத்தியத்திடம் அடகு வைத்து விட்டார் எடப்பாடி..,
    சிவகங்கை மாவட்டம்சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டுஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில்நகர மன்றத் தலைவர் துரை. ஆனந்த்அரசு வழக்கறிஞர் ஆதி அழகர்சாமி ஆகியோர் முன்னிலையில்மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நாஞ்சில் சம்பத் உரையாற்றும்போது “தமிழக முதல்வரின் பல சாதனையை எடுத்துரைத்தார்.குடும்பத்தை நடத்த பெண்கள் சுமையை… Read more: அதிமுகவை மத்திய ஏகாதி பத்தியத்திடம் அடகு வைத்து விட்டார் எடப்பாடி..,
  • மர்ம நபர்களால் நள்ளிரவில் கொலை..,
    மதுரை உத்தங்குடி அருகே அபினேஷ் என்ற இளைஞரை வீட்டின் முன்பு வைத்து மூன்று பேர் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரதத்தை அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா..,
    நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்தவகையில் 24 நாட்கள் நடைப்பெறும் இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா இன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தேவபுரிஸ்வரர் ஆலய குளக்கரையில் இருந்து மங்கள இசை வாத்தியங்கள் முழங்க 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர். தொடர்ந்து செல்லமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று… Read more: செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா..,
  • கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள்
    கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரணைகள் காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், கரும்புச்சாறு, இளநீர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை… Read more: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள்
  • பெரம்பலூரில் வழிபறி செய்த குற்றவாளி கைது
    பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபறி செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17.04.25 அன்று மதியம் 01.00 மணியளவில், கோகுல் (28), த/பெ பூபதி, நரசிம்மன் நாயுடு தெரு, பரமத்தி வேலூர், திருச்சங்கோடு.என்பவர் அரியலூரிலிருந்து அசாமுக்கு TN 86 H 1054 என்ற பதிவு எண் கொண்ட லாரியில் சென்று கொண்டிருந்தார். வழியில், பெரம்பலூர் நான்கு… Read more: பெரம்பலூரில் வழிபறி செய்த குற்றவாளி கைது
  • ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம்..,
    ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம். மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி. சென்னை அணி நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. 45… Read more: ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம்..,
  • பகவதி அம்மன் திருக்கோவில் யாகசாலை பூஜை கால் நாட்டு…
    மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை துவக்க விழா கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மே மாதம் 11-ம் தேதி கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை யோட்டி யாகசாலை பூஜை துவக்க விழா கால் நாட்டும் நிகழ்ச்சி குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை நடந்தது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் பழனிக்குமார், துளசிதரன் நாயர் உள்ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள்,… Read more: பகவதி அம்மன் திருக்கோவில் யாகசாலை பூஜை கால் நாட்டு…
  • பாரதிய ஜனதா கட்சி மண்டல ஆலோசனை கூட்டம்
    பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டியை வலிமைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் நகரம் தெற்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரை_ராஜா தலைமையில் நடைபெற்றது. தமிழக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ_விநாயகன் சிறப்புரையாற்றி வழிகாட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் OBC அணி மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி EX – MLA கலந்து கொண்டு… Read more: பாரதிய ஜனதா கட்சி மண்டல ஆலோசனை கூட்டம்
  • விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு – அதிமுக, சிபிஎம், பாஜக கட்சியினர் ஆதரவு…
    விசைத்தறியாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். கோவை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு 33 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக சோமனூர் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக, சிபிஎம், பாஜக உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி,… Read more: விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு – அதிமுக, சிபிஎம், பாஜக கட்சியினர் ஆதரவு…