பலவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. இதில் திருச்சிற்றம்பலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்தது. தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அல்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வாத்தி. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் தெலுங்கில் சார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கல்வியை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 2-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சில தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாத்தி படத்தில் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படம் அடுத்த வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் படத்தின் வெளியீடு தள்ளிபோனதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.