• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அக்டோபர் 30 உலக சிக்கன நாள் – முதல்வர் வேண்டுகோள்

ByA.Tamilselvan

Oct 30, 2022

இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டு மல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருட்களையும், இயற்கையின் வளங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்கனம் தொடங்குகிறது. ‘பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்தல்’ என்கிற உவமையிலிருந்து மாறுபட்டு, ‘தண்ணீரைப் பணம் போல செலவழிக்கும்’ கட்டா யத்தை உலகமே இப்போது உணர்ந்திருக்கிறது. அக்டோபர் 30 அன்று உலக சிக்கன நாளாக கடைப்பிடிக்கிறது. ‘குறைந்த பட்சத் தேவைகளுடனான வாழ்க்கை’ என்கிற கருத்தியல் விரைவாகப் பரவி வருகிறது.
ஒரு பொருளை, ‘தேவையா?’ என்று பல முறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது. விழிப்புணர்வுடன் வாழ்கையை அணுகுகிறவர்கள் குறைந்தபட்சத் தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு செலவு செய்கிறார்கள்; வருமானத்தில் பெரும்பகுதியைச் சேமித்து வைக்கிறார்கள். பெறுகிற வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைச் சேமிப்பிற்கும், மூன்றில் ஒரு பங்கை உணவு, உடை போன்ற வற்றிற்கும், மூன்றில் ஒரு பங்கைக் கல்வி, பராமரிப்பு, வரி போன்றவற்றிற்கும், பத்தில் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் யார் செலவழிக்கிறார்களோ, அவர்களே வள மான வாழ்க்கையை வாழ முடியும். சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக் குரியதாக மாற்றுகிறது. சேமி ப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.