தென்கொரியா தலைநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டதால் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டது.
தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 150பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே வேளையில் இந்த நெரிசலின் போது சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுகலான தெருவில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.