ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே குண்டுவெடித்ததில் 10 உடல் சிதறி பலியான சம்பவம் வளைகுடா நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்,கிழக்கு பாக்தாத் பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் அங்கு விளாயாடிக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்டேடியத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.