• Sun. Apr 28th, 2024

மும்பையில் அதிகரித்த கொரோனா

By

Sep 2, 2021 , , ,

மும்பையில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்து 571 ஆக அதிகரித்தது. பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 981 ஆக உயர்ந்தது.
மராட்டியத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 456 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்து 69 ஆயிரத்து 332 ஆக அதிகரித்தது. இதேபோல தொற்று நோய்க்கு மேலும் 183 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மும்பையில் பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது. அதன்படி புதிதாக 416 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 323 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மும்பையில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்து 571 ஆக அதிகரித்தது. இதேபோல மும்பையில் கொரோனா பாதித்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 981 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் துலே, ஜால்னா, ஹிங்கோலி, வாசிம் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *