புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், சேந்தமங்கலம் சமுதாயக் கூடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற

அரசு விழாவில் பெருமநாடு உள்வட்டம், சேந்தமங்கலம் மற்றும் கோதண்டராமபுரம் கிராமங்களில் சிறு இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 364 பயனாளிகளுக்கு இனாம் செட்டில்மெண்ட் ஒப்படைப்பு பட்டா ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி அவர்கள், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல்சிங்; வட்டாட்சியர் திரு.சக்திவேல் மற்றும் வருவாய் துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.




