விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுங்கன்குறிச்சியில் பிரசித்தி பெற்ற வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு வாழை மர பாலசுப்பிரமணியருக்கு பால் ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ,உள்ளிட்ட 21 அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து. சங்க அபிஷேகமும் நடைபெற்றது.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்ரமணியரை தரிசனம் செய்தனர்.





