• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கொச்சியில் சரக்குக் கப்பல் மூழ்கியது..,

கொச்சி அருகே அரபிக் கடலில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்குக் கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்த எரிபொருள் சுமார் இரண்டு நாட்டிகல் மைல் சுற்றளவில் கடலில் பரவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்களுடன் கூடிய கடலோர காவல்படையின் ரோந்து கப்பலான ஐசிஜிஎஸ் சக்ஷம் விரைந்து செயல்பட்டு வருகிறது. கடலோர காவல்படையின் மிகப்பெரிய ரோந்து கப்பலான ஐசிஜிஎஸ் சமர்த்தும் கப்பல் மூழ்கிய இடத்திற்கு விரைந்துள்ளது. இந்தக் கப்பலிலும் எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. கடலோர காவல்படையின் டோர்னியர் விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், பருவமழையின் காரணமாக கொந்தளிப்பான கடலில் கண்டெய்னர்கள் வேகமாக அடித்துச் செல்லப்படும் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் கடலோர காவல்படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பலத்த காற்று வீசுவதால் இவை கரை ஒதுங்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான இந்த சர்வதேச கப்பல் பாதையில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூழ்கிய கப்பலில் இருந்த ரஷ்ய கேப்டன், தலைமை பொறியாளர், பொறியாளர் ஆகியோரை கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா கப்பலிலும், மற்ற 21 ஊழியர்களை கடலோர காவல்படையின் ஐசிஜிஎஸ் அர்ணேஷ் கப்பலிலும் கொச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நேற்று கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரையை அடைய அதிக வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் கடற்கரையை அடைய அதிக நேரம் ஆகும். இன்று மதியத்திற்குள் கண்டெய்னர்கள் கரைக்கு அருகில் வரக்கூடும். கண்டெய்னரில் என்ன இருக்கிறது என்ற விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. கந்தகம் கலந்த எரிபொருளாக இருக்கலாம் என்ற தகவல் உள்ளது.

விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் கொச்சிக்கு வெளியே கடலில் விபத்துக்குள்ளானதால் கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. கடற்கரையிலிருந்து 38 நாட்டிகல் மைல் (70.3 கிலோமீட்டர்) தென்மேற்கில் கப்பல் சாய்ந்தது. கண்டெய்னர்களில் அபாயகரமான இரசாயனப் பொருட்கள் அடங்கிய எரிபொருள் உட்பட இருக்கலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நேற்று மதியம் 1.25 மணிக்கு கப்பல் 26 டிகிரி சாய்ந்ததாகவும், சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்ததாகவும் கடலோர காவல்படையின் மீட்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் கடலோர காவல்படையின் டோர்னியர் விமானம் மற்றும் ரோந்து கப்பல்களான ஐசிஜிஎஸ் அர்ணேஷ், ஐசிஜிஎஸ் சக்ஷம் மற்றும் கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சுஜாதா ஆகியவை சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியைத் தொடங்கின. பலத்த காற்று காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் கொச்சிக்கு வெளியே கடலில் விபத்துக்குள்ளானதால் கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. கடற்கரையிலிருந்து 38 நாட்டிகல் மைல் (70.3 கிலோமீட்டர்) தென்மேற்கில் கப்பல் சாய்ந்தது. கண்டெய்னர்களில் அபாயகரமான இரசாயனப் பொருட்கள் அடங்கிய எரிபொருள் உட்பட இருக்கலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கப்பலில் இருந்த 24 ஊழியர்களில் 21 பேரை கடலோர காவல்படையும் கடற்படையும் நேற்று மீட்டனர். மூன்று பேர் கதி என்னவென்று தெரியவில்லை.