விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் வாக்கு என்னும் பணிகள் தொடங்கியது. 8 மணிக்கு தபால் வாக்குகள் என்ன தொடங்கப்படு அதைத் தொடர்ந்து 8.30 மணி அளவில் மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டது.

தற்போது வரை ஐந்து சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் ராஜபாளையத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் முன்னிலை ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சிவகாசியில் அதிமுக வேட்பாளர் கே டி ராஜேந்திர பாலாஜி 1200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில், உள்ளார். விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகர் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ராமச்சந்திரன் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு அங்கு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

திருச்சூழி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பின்னடைவு தமிழக வெற்றி கழகம் முன்னிலை வைக்கிறது. அதே போல் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகிக்கிறது.




