• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பூசாரி பலி: இதுவரை 9 பக்தர்கள் உயிரிழப்பு

ByTBR .

Apr 29, 2024

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வேலூர் கிராமம் டாக்டர் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் பூசாரி புண்ணியகோடி (46). இவர், அங்குள்ள கோயிலில் பூசாரியாக இருப்பதுடன், விசேஷங்களுக்கு சாமியானா பந்தல் போடும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சுலோச்சனா (35) என்ற மனைவியும், கவிப்பிரியன் (15) என்ற மகனும், காவ்யா (11) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மலை ஏறுவதற்காக 10 நண்பர்களுடன் வந்த புண்ணியகோடி, பூண்டி வெள்ளிங்கிரி மலையில் ஏற தொடங்கியுள்ளார். 1-வது மலை ஏறிக்கொண்டிருக்கும் போது இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாரம் தூக்கும் டோலி தொழிலாளர்கள் உதவியுடன் புண்ணிய கோடியை அடிவாரம் கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவ பணியாளர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.