• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

உனக்காக நான் காத்திருக்கும்
அத்தனை
நிமிடங்களுமே அழகானவை

என் பேரானந்தத்தின் ஆசைகளின்
அணிவகுப்பு ஆரவாரமாய் நடக்கிறது

நீ தாமதமாகவேனும் என்எதிரே வந்துவிடு

அத்தனையும் நான் மறந்து , சிறு பிள்ளையாக கோபங்களால்

உன் கொஞ்சுதலை ரசிக்கிறேன்.

என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்