• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மகளிர் விவசாய உற்பத்தியாளர் குழுவில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடை நீக்கம்

ByP.Thangapandi

Jan 25, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி மகளிர் விவசாய உற்பத்தியாளர்கள் குழுவின் வங்கி கணக்கில் இருந்த சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை உசிலம்பட்டி மகளிர் குழு வட்டார ஒருங்கிணைப்பாளரான நிர்மலாதேவி என்பவர் போலியான கையெழுத்திட்டு பணம் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக மகளிர் உற்பத்தியாளர் குழு செயலாளர் நிஷாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் எழுமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, தொடர் விசாரணை நடைபெற்று வரும் சூழலில், இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மதுரை மாவட்ட இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் ( பொ ) வானதி முறைகேட்டில் ஈடுபட்ட நிர்மலாதேவியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.