மின்காந்தக் கதிர்வீச்சு கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற சோவியத் ரஷ்யா இயற்பியலாளர் இகோர் எவ்ஜெனீவிச் டாம் நினைவு தினம் இன்று (ஏப்ரல்-12, 1971)
இகோர் எவ்ஜெனீவிச் டாம் (Igor Yevgenyevich Tamm) ஜூலை 08, 1895ல் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் பிறந்தார். 1914ல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, அவர் தன்னார்வ கள மருத்துவராக இராணுவத்தில் சேர்ந்தார். 1917 ஆம் ஆண்டில் அவர் புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தார். அவர் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி 1918ல் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியைத் தொடங்கியதோடு, தனது உயர் கல்வியையும் தொடர்ந்தார். முதலில் ஆசிரியர் உதவியாளர், அதைத் தொடர்ந்து ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்தார். இயல்-கணித அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். மாஸ்கோ லெபடெவ் இயற்பியல் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவராக 1934 முதல் 1971 வரை பணியாற்றினார்.
திடப்பொருட்களின் மேற்பரப்பில் காணப்படும் வினோத வடிவிலான எலெக்ட்ரான் பிணைப்பு, திடப்பொருட்களில் சிதறுண்ட ஒளியின் குவாண்டம் கோட்பாடு ஆகியவை குறித்து இவரது ஆரம்பகால ஆராய்ச்சிகள் இருந்தன. 1934 ஆம் ஆண்டில், நியூட்ரானுக்கு பூஜ்ஜியமற்ற காந்த தண்மை இருப்பதாக டாம் மற்றும் விந்து ஆல்ட்ஷுல்லர் பரிந்துரைத்தனர். நியூட்ரான் பூஜ்ஜியக் கட்டத்துடன் ஒரு அடிப்படை துகள் என்று கருதப்பட்டதால், அந்த நேரத்தில் அந்த யோசனை சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஒரு காந்த தண்மை இருக்க முடியாது. அதே ஆண்டில், புரோட்டான்-நியூட்ரான் இடைவினைகள் இன்னும் அறியப்படாத துகள் மூலம் பரவும் பரிமாற்ற சக்தியாக விவரிக்கப்படலாம் என்ற கருத்தை டாம் உருவாக்கினார். இந்த யோசனை பின்னர் ஹிடெக்கி யுகாவாவால் மீசன் சக்திகளின் கோட்பாடாக உருவாக்கப்பட்டது. திரவப் பொருட்களின் வழியாக காமா கதிர்கள் கடந்து செல்லும்போது ஒளி உமிழப்படுகிறது என்பதை 1934ல் கண்டறிந்தார்.
பிறகு சார்பியல் கோட்பாடு, குவாண்டம் இயக்கவியல் பற்றிய ஆராய்ச்சிகளில் இவரது கவனம் திரும்பியது. “அணுத் துகள்களின் எதிர்வினைகளை விளக்கும் முறையை” வகுத்தார். 1940-50ம் ஆண்டுகளில் ‘சோவியத் தெர்மோநியூக்ளியர் குண்டு’ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். “ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான கோட்பாட்டுப் பிரிவின் தலைவராக” பணிபுரிந்தார். முதல் ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு சோதனை வெற்றிக்குப் பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார். கதிர்வீச்சு தொடர்பாக ‘டேம் டான்காஃப் அப்ராக்ஸிமேஷன்’ என்ற எளிய கணக்கீட்டு முறையைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.
மின்காப்புப் பொருள் வழியாக மின்சுமையுடன் கூடிய பொருள் கடந்து செல்லும்போது “மின்காந்தக் கதிர்வீச்சு” வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிந்த மூன்று சோவியத் ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர். ‘செரன்கோவ் வாவிலோவ் விளைவு’ (Cherenkov-Vavilov effect) எனப்படும் அந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுடன் சேர்ந்து 1958ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை இகார் டேம் பகிர்ந்துகொண்டார். இதன்மூலம், எலெக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்களின் திசைவேகத்தை கணக்கிட முடியும். லொமோனோசோவ் தங்க பதக்கம்,சோஷலிஸ்ட் தொழிலாளர் ஹீரோ ஆணை ஸ்டாலின் பரிசு போன்ற பரிசுகளை பெற்றார். தனது வாழ்வில் இறுதி வரை அறிவியல், கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இகோர் எவ்ஜெனீவிச் டாம் ஏப்ரல்12, 1971ல், தனது 75வது அகவையில் மாஸ்கோ, ரஷியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.