• Tue. Apr 30th, 2024

அண்ணாவின் 54-வது நினைவு தினம்-குமரி மாவட்ட திமுக சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரிமாவ்டட திமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54_வது நினைவு தினத்தை முன்னிட்டு.கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன் தலைமையில்.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி மு க செயலாளர் பா. பாபு அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில்.கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி துணைத்தலைவர் ஜெலஸ் மைக்கேல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய உறுப்பினர் பிரேமலதா, மற்றும் ஏராளமான தி மு க வினர்கள் பங்கு பெற்று அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *