மாண்டஸ் புயல் தாக்கத்தால் மெரினா கடற்கரை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அழகான இந்த கடற்கரை புயலுக்கு பின் உள்ள வீடியோ.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன்போது, 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளது.மேலும் மெரினா கடற்கரை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தள்ளது. இன்று மாலைக்கு சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம்.