தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில், மாவட்ட கவுன்சிலர் ஜிகே பாண்டியன் முன்னிலையில் திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் ஆண்டிபட்டி சேர்மனும், மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் நிர்வாகிகள் உடன் வந்து மாலை மரியாதை செய்தனர் .
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஒன்றியச் செயலாளர் தவச்செல்வம் ஒன்றிய துணைச் செயலாளர் அய்யணன் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது .இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம் செல்வம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்க ராஜ் முன்னிலையில் நிர்வாகிகள் மனோஜ்குமார், பகவதி ராஜ்குமார் , பாண்டி முனீஸ், முருகேசன், பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி எஸ் கே. ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது .உடன் நிர்வாகி ரத்தினவேல் உட்பட பலர் உடனிருந்தனர். தேமுதிக சார்பில் நகர செயலாளர் பாலாஜி நிர்வாகிகளுடன் வந்து திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆண்டிபட்டி வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் பாண்டியராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .ஆண்டிபட்டி மாலை கோவில் வளாகத்தில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் நிர்வாகிகள் பலர் வந்திருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஏற்பாடுகளை ஆண்டிபட்டி வட்டார நாயுடு ,நாயக்கர் சமுதாய சங்கத்தினர் செய்திருந்தனர்.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]