ஜம்புதுரைகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 108வயது மூதாட்டி ஒருவர் தன் வீட்டை ஏமாற்றி வாங்கி நடுத்தெருவில் விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஜம்புதுரைகோட்டை ஊராட்சி, மெட்டூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கண்ணி என்ற 108 வயதுடைய மூதாட்டி என் கணவர் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை ஏமாற்றி வாங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீண்டும் பெற்றுத்தருமாறு மனு அளித்தார்.