டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்று மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் அச்சத்துடனும், குழப்பத்துடனும் இருந்து வருவதுதுதான் தற்போதைய பரபரப்பே!
கொரோனா மூன்றாவது அலை முடிந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது பரவத் தொடங்கியிருக்கும் புதிய வகை தொற்றால் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒமைக்ரான் எக்ஸ்இ மற்றும் பிஏ.2 வகை திரிபுகள் அதிவேகமாக பரவுகின்றன.
டெல்லியில் கொரோனா பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் இந்தியாவில் மொத்தமாக 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் புதிதாக 325 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 3இல் ஒரு பங்கு தொற்று பாதிப்பு டெல்லியில் பதிவாகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று பரவல் 0.57 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது அது 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 574 பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பள்ளிகள் மூடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். “கல்வியில் இடையூறு ஏற்படுத்த அரசு விரும்பவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கல்வி நிலையங்களை தொடர்ந்து இயங்கச் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது. எனவே பள்ளிகள் மூடப்படுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும். தேவையெனில், பாதி அளவில் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் எக்ஸ்இ மற்றும் பிஏ.2 தான் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் கொரோனாவின் புதிய திரிபுகள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. தென்கொரியாவில் தினமும் 1.5 லட்சத்துக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் உலக நாடுகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் தாக்கம் இந்தியாவில் மிக விரைவில் உணரப்படும் என்கிறார்கள்.
- அழகு குறிப்புகள்சரும அழகிற்கு கடுகு எண்ணெய்:கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக […]
- சமையல் குறிப்புகள்ஃப்ரெஞ்ச் ஃப்ரை: தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – […]
- தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சுதந்திரதினவிழாமதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது […]
- அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3%உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!!அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாட்டின் 76ஆவது சுதந்திர […]
- ஊர்வலம், ஆர்பாட்டம் நடித்த மதுரையில் தடை..!!மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
- ஒரு கால்டாக்ஸி டிரைவரின் ஒருநாள் வாழ்க்கை படமாகிறது! – “4554”மன்னன் ஸ்டுடியோஸ்சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும்‘4554’ திரைப்படத்தில்அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்க, […]
- இன்றைய ராசி பலன்மேஷம்-தாமதம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-சிந்தனை கடகம்-உழைப்பு சிம்மம்-உதவி கன்னி-பேராசை துலாம்-பயணம் விருச்சிகம்-விவேகம் தனுசு-களிப்பு மகரம்-ஏமாற்றம் கும்பம்-சாதனை மீனம்-விருத்தி
- ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர […]
- சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்புஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் […]
- திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் […]
- பொது அறிவு வினா விடைகள்எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் […]