தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டு, விஷ_ பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்த்து நெரிசல் இன்றி பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில்களில் ஏப்.12,13,14,15 ஆகிய 4 நாள்களுக்கு கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்கப்பட்டன. இதனால், பல்வேறு ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதியாகி, மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.
கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்ட ரயில்கள் விவரம்: ராமேசுவரம்-சென்னை எழும்பூருக்கு ஏப்,18,19, 20 தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (22662), மங்களூரு-சென்னை எழும்பூருக்கு ஏப்.17-இல் இயக்கப்படும் விரைவு ரயில் (16160), சென்னை எழும்பூர்-காரைக்காலுக்கு ஏப்.17-இல் இயக்கப்படும் விரைவு ரயில் (16175), காரைக்கால்-சென்னை எழும்பூருக்கு ஏப்.16, 18 தேதிகளில் இயக்கப்படும் விரைவுரயில் (16176), தாம்பரம்-நாகர்கோவிலுக்கு ஏப்.17-இல் இயக்கப்படும் விரைவு ரயில் (22657), நாகர்கோவில்-தாம்பரத்துக்கு ஏப்ரல் 18-இல் விரைவு ரயில் (22658), மதுரை-சென்னை சென்ட்ரலுக்கு ஏப்ரல் 17-இல் இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் (20602) ஆகியவற்றில் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்.20 வரை ஒரு பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்படும் ரயில்கள்: சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு ரயில்(16723), சென்னை எழும்பூர்-ராமேசுவரம் விரைவு ரயில்(22661), சென்னை எழும்பூர்-ராமேசுவரம்-சென்னை எழும்பூர்(16851-16852), தஞ்சாவூர்-சென்னை எழும்பூர்-தஞ்சாவூர்(16866-16865), சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல்(12695-12696) உள்பட 12 விரைவு ரயில்களில் ஏப்.20-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது.
ஏப்.21 வரை கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்ட ரயில்கள்: கொல்லம்-சென்னை எழும்பூர் விரைவு ரயில்(16724), குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில்(16128) உள்பட 5 ரயில்களில் ஏப்.21 வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […]