இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொம்பன்’ படத்திற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, அண்மையில் வெளியான இந்தப் படத்தின் “காஞ்ச பூ கண்ணால…” பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் படத்தின்ட்ரெய்லரை இயக்குநர் சங்கர் வெளியிட்டார்.

ட்ரெய்லர் எப்படி?
நாலு திசைக்கு வெளிச்சம் கொடுக்குற சூரியன் மாதிரிதான்யா நீ இருக்கணும்’ என்ற தாயின் வார்த்தைகளுடன் தொடங்குகிறது ட்ரெய்லர்.கிராமத்து இளைஞனுக்கே உண்டான உடல்மொழி, உடைகளுடன் கம்பீரமாக கார்த்தி. படத்தில் பிரகாஷ்ராஜ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ‘கத்தி பேசுறது கத்தியைக் காட்டி பேசுறது விருமனுக்கு பிடிக்காது’, ‘என் பிள்ளையா பாசத்த காட்டி அடிச்சிடலாம்.பயமுறுத்தி கிட்ட கூட நெருங்க முடியாது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

ஆனால், ட்ரெய்லர் முழுக்க அடிப்பது, தூக்கி வீசுவது என ஒரே சண்டைக்காட்சிகளின் தொகுப்பாகவே இருக்கிறது. மாறாக தொடக்கத்தில் காட்டப்பட்ட தாய் – மகன் காட்சிகள் மீண்டும் ட்ரெய்லரின் ஏதோ ஒரு இடத்தில் சென்டிமென்ட் காட்சிகளாக வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும், ட்ரெய்லரில் படத்தின் கதை குறித்து யூகிக்கும் காட்சிகள் இல்லாததும் சற்று ஏமாற்றம்தான்.அப்படியில்லாமல், ஒட்டுமொத்த ட்ரெய்லரை பார்க்கும்போது படம் முழுவதும் சண்டை மற்றும் பஞ்ச் வசனங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- பயங்கரவாத தாக்குதல் ..மதுரை ராணுவ வீரர் பலிராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச்சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.ஜம்மு ,காஷ்மீரில்ராணுவ […]
- எஸ்.பி .வேலுமணி வழக்கு ..தடைவிதிக்க கோர்ட் மறுப்புமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் […]
- நடுரோட்டில் கதறி அழுத போலீஸ்..வைரல்வீடியோஉ..பியில் மோசமான உணவு வழங்கப்படுவதை நடுரோட்டில் கதறி அழுத படியே முறையிடும் போலிஸ்காரரின் வீடியோ இந்தியா […]
- ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழாமதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.75வது சுதந்திர தின […]
- மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுமதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் […]
- முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க […]
- சமையல் குறிப்புஈசியான சமையல் டிப்ஸ் ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக […]
- அழகு குறிப்புபொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு […]
- குறள் 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்(மு.வ): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனை துளிகள் ஏழையாய் ஆனாலும் பெரும்செல்வந்தனாய் ஆனாலும்பிறருக்காக வாழ்ந்திடேல்பெரு மனிதனாய் போற்றப்படுவாய்… அர்த்தமுள்ள வாழ்க்கைதனைவாழ்ந்திட்ட ஒரு […]
- பொதுஅறிவு வினா விடைதூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?விடை: 1953 பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜாராம் மோகன்ராய் […]
- பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்துபூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து […]
- தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்திதேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி […]
- பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் […]
- ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளிதிருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் […]