• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

குன்னூர் உலிக்கல்சிஎஸ்ஐ
பள்ளியில் முப்பெரும் விழா

நீலகிரி மாவட்டம் உலிக்கல் சிஎஸ்ஐ பள்ளியில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு குளிருக்கு இதமான சொட்டர் பரிசுப் பொருட்கள், இனிப்புகள், பேனா, பென்சில் ரப்பர் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மரம் நடுவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சாமுவேல் இன்ஜினியர் எட்வின் பிரேம் டேனியல், ஆசிரியர் பன்னீர், திருப்பூர் வடிவேல், ரெஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் நல்லுள்ளம் அறக்கட்டளை நிறுவனர் உலிக்கல் சண்முகம் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.