கோழிகளுக்கு ஏற்படும் இந்த வெள்ளை கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்களிலும், 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவ கிளை நிலையத்திலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமிலும், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 14.2.2022 வரை ஒரு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. எனவே,கோழிகளை வளர்ப்போர் பயன்பெறலாம்.