அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதால் நோய்கள் பெருகும் அபாயம் இருப்பதாக
- மருத்துவப் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் எச்சரிக்கை
அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பல நோய்கள் வருவதாக டாக்டர் சுதா சேஷய்யன் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.., பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர் இவ்வாறு பேசினார். கல்லூரியில் நர்சிங் முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா அடையாறு டி.என்.ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.வி.வீரமணி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். நர்சிங் கல்லூரி சேர்மன் பேராசிரியர் கே.ஆர்.ஆறுமுகம், துணை சேர்மன் டாக்டர்.எ.பாபு தண்டபாணி ஆகியோர் வரவேற்றனர்.

மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிய பின் டாக்டர் சுதா சேஷையன் பேசியதாவது; “மருந்தியல் மற்றும் மருந்தாக்கியல் துறைகள் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. மருத்துவத்துறை வளர வளர மருந்துகளின் தேவை அதிகமாக இருப்பதால் இத்துறையும் விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பல நோய்களுக்கும் புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மருத்துவம் படித்து சேவை செய்ய விரும்பும் மாணவர்கள் இந்த படிப்புகளை படிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மருத்துவம் தொடர்பான இந்த படிப்புகளில் சேர்க்க வேண்டும். மருத்துவத்துறையில் மாணவர்களுக்கு எப்போதும் எதிர்காலம் உண்டு” என்றார்.
மேலும், “நுகர்வு கலாச்சாரம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள் அன்றாட உணவுகளில் இடம் பிடித்து விட்டன. மேலும், அழகு சாதன பொருட்களை எல்லோரும் பயன்படுத்த தொடங்கி விட்டோம். 30-40 ஆண்டுகளுக்கு முன்பு இவற்றின் பயன்பாடு பெரிதாக இல்லை. இவற்றைப் பயன்படுத்துவது பல நோய்களுக்கு வழிவகுக்கும். இவற்றை குறைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]