சேலத்தில் 70 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை முறைகேடாக ஏலம் பெற்ற தனியார் வங்கி. தென்னை மரங்கள், விதை நெல் நாற்றுகள், மாட்டு தீவனங்கள் உள்ளிட்டவைகள் அழிப்பு…..நோட்டீஸ் அனுப்பாமல் நடவடிக்கை எடுத்ததாக அதிமுக பிரமுகர் புகார்……
சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன் .இவர் தற்போது அதிமுகவில் உறுப்பினராக உள்ளார் .இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஒரு தனியார் வங்கியில் தனக்கு சொந்தமான கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை அடமானமாக வைத்து 12.5 கோடி கடன் வாங்கினேன். அதற்கான கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் திடீரென அந்த வங்கி 70 கோடி மதிப்பிலான சொத்தை, வெறும் ஒன்பது கோடிக்கு ஏலம் விட்டது . மேலும் அந்த நிலத்தில் உள்ள தென்னை மரங்களையும் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி மாட்டு தீவனங்கள், விதைநெல் நாற்றுகளையும் அழித்தனர்.
இதனை அறிந்த நான் அதனை தடுக்க முயன்றேன். அப்போது வாகனங்களில் வந்த ரவுடிகள், வங்கி அலுவலர்கள் மற்றும் அன்னதானப்பட்டி போலீசாரை வைத்து என்னை அப்புறப்படுத்தினர். அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் 5 மணி நேரம் அடைத்து வைத்தனர்.இந்த நில ஏலம் தொடர்பாக எனக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. வங்கியும் காவல்துறை இணைந்து அராஜக செயலில் ஈடுபட்டு எனது சொத்தை பறித்துள்ளது . இதற்காக பல லட்சம் பணம் கை மாறி காவல்துறைக்கு கைமாறி உள்ளதாகவும் கருதுகிறேன். வங்கி நிர்வாகம் பெரு மதிப்புமிக்க சொத்தை குறைந்த விலைக்கு பெற்று, மறைமுக கொள்ளை லாபம் அடைய காவல்துறை துணை போவதையும், வருவாய் துறையின் ஆவணங்களுக்கு எதிராகவும் வாடகைதாரர்,குத்தகைதாரர் சட்டங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு எனது மனித உரிமையை, சொத்துரிமையை எனக்கு வழங்க மறுத்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எனது சொத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]