உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் கடந்தாண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை ஜாமின் வழங்கியுள்ளது.
ஆஷிஷின் ஜாமீன் மனு, லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம், இந்த மனுவை விசாரித்த லக்னோ கிளை உயர்நீதிமன்றம் தனது உத்தரவை ஒத்திவைத்தது.
இந்நிலையில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வினோத் குமார் ஷாஹி கூறுகையில், நீதிபதி ராஜீவ் சிங் இன்று (வியாழக்கிழமை) ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார் என்றார். அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர் வன்முறை நிகழ்ந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா அக்டோபர் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதுகாப்பு ஆலோசகர் சலில் குமார் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘ஜாமீன் மனு மீதான வாதங்களின் போது, ஆஷிஷ் மிஸ்ரா சம்பவ இடத்தில் இல்லாததை சுட்டிக்காட்டி விவாதித்தோம். நீதிமன்றம் இன்று ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற உத்தரவு இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றார்.
அக்டோபர் 3, 2021 அன்று, அஜய் மிஸ்ராவுக்குச் சொந்தமான தார் உட்பட மூன்று எஸ்யூவிகள், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக டிகோனியா கிராசிங்கில் கூடியிருந்த விவசாயிகள் மீது ஏறியது. நான்கு விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். அந்த காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வன்முறையால் ஆத்திரமடைந்த மக்கள், இரண்டு பாஜக தலைவர்களையும், தார் ஓட்டுநரையும் அடித்துக் கொன்றனர். மேலும், தார் உள்ளிட்ட 2 வாகனங்களுக்கும் விவசாயிகள் தீ வைத்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய உ.பி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை கைது செய்தது.
சாட்சியங்களை அழித்தாக குற்றப்பத்திதரிகையில் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சரின் மைத்துனர் வீரேந்திர சுக்லாவுக்கு,நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுக்லாவை எஸ்ஐடி கைது செய்யவில்லை. ஜனவரி 11 அன்று, லக்கிம்பூர் கெரியின் உள்ளூர் நீதிமன்றம் வீரேந்திர சுக்லா நீதிமன்றத்தில் ஆஜராகியபோது அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அதேபோல், இரண்டு பாஜக தலைவர்கள் மற்றும் தார் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், எஸ்ஐடி இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ளது. ஜனவரி 21ம் தேதி, நான்கு பேர் மீது எஸ்ஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஆதாரங்கள் சரியாக இல்லாததால் கைது செய்த ஏழு பேரில் மூவரை எஸ்ஐடி விடுவித்தது.
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]