மதுரையில் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் சேவை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் சேவை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ரூ.4.25 லட்சம் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் சென்று சுற்றிப்பார்க்கும் வகையில், மேலூர் அருகே தெற்குத் தெரு கிராமத்தில் தனியார் சார்பில் ஹெலிகாப்டர் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் பயணிக்க ஒரு நபருக்கு 6,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனமும், தனியார் கல்லூரியும் இணைந்து அளித்து வரும் இந்த ஹெலிகாப்டர் சேவை மூலம் அழகர் கோவில், ஒத்தக்கடை யானை மலை, மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருப்பரங்குன்றம், கீழக்குயிலுள்ள புராதன சின்னங்கள் உள்ளிட்டவற்றை 15 நிமிட பயணத்தில் கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அனுமதி பெறாமல் அளிக்கப்பட்டு வருவதாக மதுரை கோட்ட நுண்ணறிவுப் பிரிவினருக்கு புகார் சென்றது. விசாரணை முடிவில் தனியார் நிறுவனத்திடமிருந்து 4.25 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட நுண்ணறிவுப் பிரிவின் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மதுரையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் பொதுமக்களுக்கான ஹெலிகாப்டர் சர்வீஸ் துவக்கி உள்ளனர்.
இரு நிறுவனங்களும் முன்பதிவின்றியும் உரிய ஆவணங்களின்றியும் வணிகம் செய்வதாக மதுரை கோட்ட நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்களுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் அலுவலர்கள் கடந்த டிசம்பர் 25 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தகுந்த ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து அந்நிறுவனங்களுக்கு 4.52 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]
- பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை […]
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]