தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையானவர் பண்டரிபாய் . கன்னடத் திரைப்பட உலகின் முதல் கதாநாயகியாக வலம் வந்தவர். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.இவரின் நடிப்புக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.பல மொழிகளில் தன் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காமல் நின்றவர் பண்டரிபாய்.இத்தகைய பெருமை வாய்ந்த ஒரு மிகச் சிறந்த நடிகை பண்டரிபாய் காலமான தினம் இன்று..!