

முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1900).

டென்னிஸ் கபார் (Dennis Gabor) ஜூன் 5, 1900ல் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918ல் இவர் குடும்பம் லூதரனிய கிருத்துவத்துக்கு மதம் மாறியது. இவர் பெற்றோருக்கு இவர்தான் முதல் மகனாவார். இறை நம்பிக்கையோடு வளர்ந்தவர், பிற்காலத்தில் தன்னை நாத்திகவாதி என்று கூறிக் கொண்டார். முதல் உலகப் போரின்போது, வட இத்தாலியில் அங்கேரி நாட்டு பீரங்கிப் படையில் பணிபுரிந்தார். 1918ல் இருந்து புடாபெஸ்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பெர்லினில் உள்ள சார்லோட்டன்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார். படிப்புக்குப் பின் இவரது பணிகளைத் துவக்கினார். கேதோடு கதிர் ஆஸிலோகிராப்பை பயன்படுத்தி உயர் மின்னழுத்தக் கம்பிகளின் பண்புகளை ஆராய்ந்தார். இதன்மூலம், எலக்ட்ரான் ஒளியியலில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆஸிலோகிராப், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், டிவி கதிர் டியூப்கள் ஆகியவை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்தார். 1927ல் முனைவர் பட்டம் பெற்றார்.

நாசி ஜெர்மனியில் இருப்பது ஆபத்து என்று, அங்கிருந்து வெளியேறினார். பிரிட்டிஷ் தாம்சன் ஹூஸ்டன் நிறுவனத்தின் வளர்ச்சித் துறையில் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்று 1933ல் இங்கிலாந்து சென்றார். பின் இங்கிலாந்து பெண்ணான மர்ஜோரியை 1936ல் திருமணம் செய்துகொண்டு 1946ல் பிரித்தானியக் குடியுரிமை பெற்றார். முப்பரிமாண ஒளிப்படவியலை (Holographic Photography) 1947ல் கண்டறிந்தார். ஆனால், 1960ல் லேசர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது வெளியிடப்பட்டு, வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு வந்தது. ஹோலோகிராபி என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை அதன் வெவ்வேறு தோற்ற வகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாண (3D) தோற்றத்தில் காட்டும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டது.

1946ல் இருந்து 1951 வரையான காலகட்டத்தில் இவர் தன் ஆராய்ச்சி முடிவுகளை ‘ரீ-ஹோலோகிராபி’ என்ற பெயரில் தொடர்ச்சியாக பல ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டார். 1948ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். இவர் 1963ல் ‘இன்வென்டிங் தி ஃப்யூச்சர்’ என்ற நூலை வெளியிட்டார். லேசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைந்ததால், ஹோலோகிராபிக் முப்பரிமாண ஒட்டிகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்தன. முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக 1971இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிப்ரவரி 8, 1979ல் தனது 78வது அகவையில் லண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By : Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
- முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர்…குமரிக்கு கிடைத்த பெருமை மிகுந்த பாராட்டு:முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர். தமிழ் நாட்டில் … Read more
- டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,விரைவில் திரைக்கு வர இருக்கும் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் திரைப்படம் “டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தின் பெயருக்கு … Read more
- சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”..!குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம், ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 ! சுந்தர் சி … Read more
- லைகா புரொடக்ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது…திரு. சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் … Read more
- தூய்மை பணியில், கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை பாதுகாப்புப் படை..,கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியான கோவளம் ஊராட்சி பகுதியில் கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை … Read more
- சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா..!சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மாகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது முழு திருவுருவச் … Read more
- “ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்..!சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! … Read more
- காந்தி சிலைக்கு கதராடை, சந்தனமாலை அணிவித்து துப்புரவு பணி செய்த பா. ஜ. க வினர்…மதுரை காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா. ஜ. க. … Read more
- மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை.., போலீசார் விசாரணை…மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மேலவாசல் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 37) … Read more
- விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்…சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காததால் இக்கிராம … Read more
- மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வெங்கடேசன் எம். எல். ஏ பங்கேற்பு..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் … Read more
- கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். … Read more
- பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பதை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட … Read more
- துளிர் அறம் செய் மையம் அமைப்பின், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..,துளிர் அறம் செய் மையம், காயல்பட்டினம் அமைப்பின் சார்பில், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார குழுவினரின் … Read more
- அக்.6ல் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் 6ஆம் தேதி … Read more
