பிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் உலகக்கோப்பை தொடர் மீதான சுவாரஸ்யம் அடுத்தக் கட்டத்தை எட்டியது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது காலிறுதி போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து தடுப்பாட்டத்தில் அசத்தி வரும் நெதர்லாந்து அணி மோதியது.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் நிதானமாக விளையாடினர். முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் பந்தை வைத்திருந்த நிலையில், நெதர்லாந்து அணி அடுத்த சில நிமிடங்களில் ஆட்டத்திற்குள் வந்தது. இரு அணி வீரர்களும், எதிரணியின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் திணறினர்.
ஆனால் 35வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த மேஜிக் பாஸை, அர்ஜென்டினா அணியின் இளம் வீரர் மொலினா கோலாக மாற்றினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் ஆதிக்கம் தொடங்கியது. இதனிடையே முதல் பாதி ஆட்டம், அர்ஜென்டினா அணியின் முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்ஸி தனியொரு வீரனாக அட்டாக்கை முன்னெடுத்தார். தொடர்ந்து 55வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி சில செ.மீ தூரத்தில் கோலை தவறவிட்டார். ஆனால் 73வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர்கள் அர்ஜென்டினா அணியின் அகுனாவை ஃபவுல் செய்தனர். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி பயன்படுத்த தயாரானபோது, கடந்த போட்டிகளில் அவர் தவறவிட்டது காட்சிகள் நினைவுக்கு வந்தன. ஆனால் அதனையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் நிதானமாக பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் மெஸ்ஸி 4வது கோலை அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்று முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் நெதர்லாந்து வீரர்களின் அட்டாக் வேறு மாதிரி மாறியது. மெஸ்ஸியையும், அர்ஜென்டினா வீரர்களுடனும் நேரடியாக தாக்க தொடங்கினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகரித்தது. இதனை பயன்படுத்தி கர்ல்ஸ் கொடுத்த கிராஸை, வெக்கோர்ஸ்ட் நெதர்லாந்து அணிக்காக முதல் கோல் அடித்தார். தொடர்ந்து இரண்டாம் பாதியில் 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
அதில் நெதர்லாந்து அணி தொடர்ந்து அட்டாக் மேக் அட்டாக் செய்ய, கடைசி நிமிடத்தில் ஃபிரி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்தி, மீண்டும் வெக்கோர்ஸ்ட் கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலை ஏற்படுத்தினார். இரு அணிகளும் தலா 2 அடித்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
- தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம்தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டது.சேலம் ஜாகீர் […]
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலிமதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் ஜாஸ் டிம்பர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்தைப்பூசம், பெளர்ணமி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அழகு குத்தி பால் குடம்,, […]
- திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபர் கொலைதிருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபரை கொலை செய்த மர்ம நபர்கள் பழிக்குபழியா என திருப்பரங்குன்றம் போலீசார் […]
- இயக்குனர் டி.பி கஜேந்திரன் உடலுக்கு விஜய பிரபாகரன் நேரில் அஞ்சலிசென்னை சாலிகிராமத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான டி பி கஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் இவரது […]
- சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொடூர கொலைசேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் […]
- ஈரோடு தேர்தல் மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது..!!ஈரோடு இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து […]
- சித்தார்த் படம் தொடக்கவிழாசித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் 5.2.2023 காலை 11மணிக்கு மிக எளிய […]
- “குற்றம் புரிந்தால்”
நீதியை கையில் எடுக்கும் ஹீரோஅமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் “குற்றம் புரிந்தால்”. இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு […] - உடல் எடையை குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாஉடல் எடையை குறைக்க சவாலாக எடுத்து குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றதுசென்னை தனியார் நட்சத்திர […]
- பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை..!!மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.பிரபல […]
- தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார்… ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய நடைமுறையில் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்ற உத்தரவை […]
- அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் சேலம் கிளை ஆலோசனைக் கூட்டம்அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் (ASM)என்ற சர்வதேச அமைப்பின் சேலம் கிளை தொடங்க ஆலோசனைக் கூட்டம் […]
- நீலகிரி மாவட்டம் அண்ணாமலை கோவிலில் தைப்பூச திருவிழாநீலகிரி மாவட்டத்தின் பழனி என்று அழைக்கப்படும் அண்ணாமலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் […]
- உதகை எல்க்ஹில் முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா…மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கும் எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் […]